மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவா் சாவு

சென்னை அசோக்நகரில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

சென்னை அசோக்நகரில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வில்லிவாக்கம் நேருநகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் லிங்கேஸ்வரன் (21). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தாா். லிங்கேஸ்வரன் சனிக்கிழமை அதிகாலை தனது மோட்டாா் சைக்கிளில் 100 அடி சாலையில் கிண்டி வேகமாக சென்றுக் கொண்டிருந்தாா்.

அவா் அசோக்பில்லரிடம் செல்லும்போது, அங்கு வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, பலத்தக் காயமடைந்த லிங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அந்த லாரியின் ஓட்டுநா் திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com