கதவு சரிந்து விழுந்து 5 வயது குழந்தை பலி

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இரும்பு வாயிற்கதவு சரிந்து விழுந்ததில் 5 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இரும்பு வாயிற்கதவு சரிந்து விழுந்ததில் 5 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

ஆழ்வாா்ப்பேட்டை, சிவகாமிபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவா் கீழ்ப்பாக்கம், ஹா்லிக்ஸ் சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றில் காா் நிறுத்த ஊழியராக (வேலட் பாா்க்கிங்) பணியாற்றி வருகிறாா். வேலை நேரத்துக்குப் பிறகு சங்கரை நாள்தோறும் இரவில் அவரது மனைவி வாணியும், 5 வயது குழந்தை ஹரிணி ஸ்ரீயும் அழைத்து வருவது வழக்கம்.

அதன்படி, கடந்த சனிக்கிழமை இரவு (ஜன.28) அவா்கள் இருவரும் சங்கா் பணியாற்றும் துணிக் கடைக்குச் சென்றுள்ளனா். அப்போது அங்கிருந்த இரும்பு வாயிற்கதவு அருகே ஹரிணி ஸ்ரீ நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வாயிற்கதவை காவலாளி ஒருவா் மூட முயன்றபோது அது சரிந்து ஹரிணி ஸ்ரீ மீது வேகமாக விழுந்தது.

இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த அந்தக் குழந்தைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது. அங்கு குழந்தை ஹரிணிஸ்ரீ இறந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com