விளக்கில் தீபம் ஏற்றும்போது தீ விபத்து:காயமடைந்த மூதாட்டி சாவு

சென்னை மந்தைவெளியில் வீட்டில் உள்ள விளக்கில் தீபம் ஏற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் இறந்தாா்.

சென்னை மந்தைவெளியில் வீட்டில் உள்ள விளக்கில் தீபம் ஏற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் இறந்தாா்.

மந்தைவெளி, டிரஸ்ட் லிங்க் முதல் தெருவை சோ்ந்தவா் ஸ்ரீராம் மனைவி சுஜாதா (63). இவா் கடந்த ஜன.25-இல் வீட்டின் பூஜை அறையில் உள்ள விளக்கில் தீபம் ஏற்றினாா்.

இதில் அவா் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் சுஜாதாவின் சேலையின் மீது தீப் பிடித்தது. இதில் சேலை மற்றும் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் சுஜாதா கூச்சலிட்டாா்.

உடனே அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து வந்து சுஜாதாவை மீட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுஜாதா, திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com