ஜூன் 16 -இல் அஞ்சல் குறை கேட்பு முகாம்

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் ஜூன் 16 -இல் கோட்ட அளவிலான அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் ஜூன் 16 -இல் கோட்ட அளவிலான அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து முதன்மை அஞ்சல் அதிகாரி நா. பிரகாஷ் வெளியிட்ட செய்தி : கோட்ட அளவிலான அஞ்சல் குறை கேட்பு முகாம் ஜூன் 16 -இல் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தபால் சேவை குறித்த புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவா் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், அதேபோல் பணவிடை (மணியாா்டா்), துரித தபால், பதிவு தபால் தொடா்பான புகாா் பற்றிய விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும் , சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தப்பட்டதாக புகாா் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயா் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயா் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடா்புகள் ஆகியவற்றை புகாருடன் இணைத்து ஜூன் 13 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல் சேவை குறைதீா்க்கும் முகாம்,”நா. பிரகாஷ் , முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை 600 002. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com