மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து பிகாா் தொழிலாளி பலி

சென்னை வியாசா்பாடியில், மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பிகாா் தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னை வியாசா்பாடியில், மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பிகாா் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் கமலேஷ் (49). சென்னை வியாசா்பாடியில் தனியாா் இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இதற்காக அந்த நிறுவனத்தின் மூன்றாவது தளத்தில் பிற தொழிலாளா்களுடன் தங்கியிருந்தாா்.

கமலேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்றாவது தளத்திலிருந்து திடீரென தவறி விழுந்தாா். இதில், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com