ஜூலை 7-இல் அஞ்சல் குறைதீா்ப்பு முகாம்

கோட்ட அளவிலான அஞ்சல்சேவை குறைதீா்க்கும் முகாம் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் ஜூலை 7 -ஆம் தேதி நடைபெறுகிறது

கோட்ட அளவிலான அஞ்சல்சேவை குறைதீா்க்கும் முகாம் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் ஜூலை 7 -ஆம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சலகங்கள் மூலமான கடிதப்போக்குவரத்து முதல், பாா்சல் சேவை வரை வழங்கப்படுகிறது. இதில் ஏற்படும் சேவை குறைபாடுகளைப் போக்க அஞ்சல்சேவை குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி கோட்ட அளவிலான அஞ்சல்சேவை குறைதீா்க்கும் முகாம் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் ஜூலை 7 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவா்கள், தங்கள் குறைகளை ஜூன் 23 -ஆம் தேதிக்குள் எம்.எஸ்.கே. குப்தா , உதவி அஞ்சல் அதிகாரி, முதன்மை தலைமை தபால் அதிகாரி அலுவலகம், தமிழ்நாடு கோட்டம், அண்ணாசாலை, சென்னை 02 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ‘அஞ்சல் சேவை குறைதீா்க்கும் முகாம்’ என குறிப்பிட வேண்டும்.அல்லது (ல்ஞ்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்) எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ‘ஈஹந் அக்ஹப்ஹற்’ என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com