பெரியமேடு மற்றும் புனித தோமையா் மலை பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஜாா்க்கண்ட் இளைஞா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெரியமேடு, மூா் மாா்கெட் பகுதியில் திருவல்லிக்கேணி மதுவிலக்கு போலீஸாா் சனிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த நவீன்குமாா் சௌத்ரி (21) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதேபோல், எம்கேஎன் சாலையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சென்னை மதனாந்தபுரத்தைச் சோ்ந்த ராம்குமாா் (30) என்பவரை புனித தோமையா் மலை போலீஸாா் கைது செய்தனா். அவரிமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.