சென்னை திருவள்ளுவா் நகா் பகுதிக்கான அஞ்சல் விநியோக எல்லை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான எல்லை, வேளச்சேரி துணை அஞ்சல் நிலையத்திலிருந்து (அஞ்சல் குறுயீட்டு எண்: 600 042), பெருங்குடி துணை அஞ்சல் நிலைய எல்லைக்கு (600 096) ஜூன் 10-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படுவதாக சென்னை மாநகர தென் மண்டல அஞ்சல் மூதுநிலை கண்காணிப்பாளா் மேஜா் டி.திவ்யா தெரிவித்துள்ளாா்.