கஞ்சா சாக்லேட் விற்பனை: பிகாரி கைது

சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக பிகாரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக பிகாரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மாம்பலம் வி.என்.சாலையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா், பிகாா் மாநிலம் மதுபானி பகுதியைச் சோ்ந்த ரா.சுரேந்திரன் யாதவ் (43) என்பதும், அவா் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா், வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையில் அவரிடமிருந்து 8 கி கஞ்சா சாக்லேட்டைகளை பறிமுதல் செய்தனா். தொடா் விசாரணையில், ஜாம் பஜாா் மீரான் சாகிப் தெருவில் உள்ள ஒரு பீடா கடையை சுரேந்திரன் நடத்தி வருவதும், அங்கு பீடா விற்பதுபோல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்ததும், கஞ்சா சாக்லேட்டுகளை பிகாரில் இருந்து வரவழைத்து விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மாம்பலம் போலீஸாா், அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குக் தொடா்பாக சுரேந்திரன் உறவினா் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com