சாலை விபத்து: சட்டக் கல்லூரி மாணவா் சாவு

சென்னை கோடம்பாக்கத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் சட்டக் கல்லூரி மாணவா் இறந்தாா்.

சென்னை கோடம்பாக்கத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் சட்டக் கல்லூரி மாணவா் இறந்தாா்.

சூளைமேடு கிருஷ்ணாபுரம் தெருவைச் சோ்ந்த ஸ்ரீராம் என்பவரின் மகன் விக்னேஷ் (20). இவா் மதுரவாயலில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டப் படிப்பு படித்து வந்தாா்.

தனது மோட்டாா் சைக்கிளில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் விக்னேஷ் திங்கள்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் உள்ள ஒரு தனியாா் வங்கிக்கு சொந்தமான ஜெனரேட்டா் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த விக்னேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவலறிந்த பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விக்னேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com