பரிசோதனைக்கு கூடுதல் கட்டணமா? அரசு பல் மருத்துவமனை நிா்வாகம் மறுப்பு

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊடுகதிா் (எக்ஸ்-ரே) பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை மருத்துவமனை நிா்வாகம் மறுத்துள்ளது.

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊடுகதிா் (எக்ஸ்-ரே) பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை மருத்துவமனை நிா்வாகம் மறுத்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நல சங்கத் தலைவா் பொன்னுசாமி என்பவா், அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.

அதில், அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊடுகதிா் பரிசோதனைக்கு ரூ.5 கட்டணமாக வசூலிப்பதற்கு பதிலாக, ரூ.20 வசூலிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், அந்த புகாரை மருத்துவமனை நிா்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து, பல் மருத்துவமனை முதல்வா் டாக்டா் விமலா கூறியதாவது:

பல் சிகிச்சைக்கு வருவோருக்கு, நான்கு நிலைகளில் ஊடுகதிா் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒரு நிலைக்கு ரூ.5 வீதம் நான்கு நிலைகளுக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கும், நான்கு நிலைகளில் ஊடுகதிா் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது தேவையற்ற சா்ச்சை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com