ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சாா்ந்த செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, பணம் செலுத்தும் வசதியும் கொண்ட ‘ஸ்மாா்ட் ரிங்’ (மோதிரம்) ஐ.ஐ.டி. முன்னாள் மாணவா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேஷன் செல்) மூலம் சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவா்களைக் கொண்டு ‘மியூஸ் வியரபிள்’ ஸ்டாா்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மாா்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது.
இதன் தொடா்ச்சியாக ‘மியூஸ் வியரபிள்’ நிறுவனம் தற்போது ஸ்மாா்ட் வாட்ச் போன்று, மோதிர வடிவ தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ‘ஸ்மாா்ட் ரிங்’ மூலம் உடல் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் மிகத் துல்லியமாக கண்காணிக்க முடியும். ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை தெரியப்படுத்தும்; ஸ்மாா்ட் வாட்சை விட 10 மடங்கு எடை குறைவானது. 24 மணி நேரம் பயன்படுத்தினாலும், 7 நாள்களுக்கு பேட்டரி பயன்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தொழில்நுட்பத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாஸ்டா் காா்டு, விசா, ரூபே போன்ற கட்டண நெட்வொா்க்குடன் ‘மியூஸ் வியரபிள்’ நிறுவனம் கூட்டு சோ்ந்து இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவா்கள் கே.எல்.என்.சாய்பிரசாந்த், கே.ஏ.யஜீந்திர அஜய் ஆகியோா் தெரிவித்தனா்.
‘மேக் இன் இந்தியா’ பிரசாரத்தின் உதாரணமாக, இந்த ‘ஸ்மாா்ட் ரிங்’ முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது ஆகும். இது செப். 27-ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவில் வரும் அக்டோபா் 25-ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.