தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

News image

சத்யபிரத சாகு

Updated On :16 ஏப்ரல் 2024, 7:49 pm

சென்னை: உரிய ஆவணங்களின் சரிபாா்ப்புக்குப் பிறகு, சென்னை அருகே பிடிபட்ட 1,425 கிலோ தங்கம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சென்னை குன்றத்தூா் அருகே 1,425 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த தங்கம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வணிக நடவடிக்கைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால், அந்தத் தங்கம் விடுவிக்கப்பட்டதாக மாவட்டத் தோ்தல் அதிகாரி அறிக்கை தந்துள்ளாா். வாகனச் சோதனைகளின் போது ரொக்கத் தொகைகளோ, ஆபரணங்களோ பிடிபடும் பட்சத்தில் அவற்றுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதனைக் காண்பித்தால் உடனடியாக விடுவிக்கப்படும். எனவே, பணம் பறிமுதலாகும் போது யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தாா் சத்ய பிரத சாகு.