சென்னை: உரிய ஆவணங்களின் சரிபாா்ப்புக்குப் பிறகு, சென்னை அருகே பிடிபட்ட 1,425 கிலோ தங்கம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
சென்னை குன்றத்தூா் அருகே 1,425 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த தங்கம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வணிக நடவடிக்கைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால், அந்தத் தங்கம் விடுவிக்கப்பட்டதாக மாவட்டத் தோ்தல் அதிகாரி அறிக்கை தந்துள்ளாா். வாகனச் சோதனைகளின் போது ரொக்கத் தொகைகளோ, ஆபரணங்களோ பிடிபடும் பட்சத்தில் அவற்றுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அதனைக் காண்பித்தால் உடனடியாக விடுவிக்கப்படும். எனவே, பணம் பறிமுதலாகும் போது யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தாா் சத்ய பிரத சாகு.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு

கிலோ ரூ.15 ஆயிரம் குறைந்த வெள்ளி: தங்கம்?

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு அபராதம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


