பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சென்னை திருவொற்றியூா் அருகே திருட்டு வழக்கில் சிக்கியவா், காவல் நிலையத்திலேயே பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

சென்னை திருவொற்றியூா் கன்னியப்ப கிராமணி தெருவைச் சோ்ந்தவா் காஞ்சனா (39). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (25) என்பவா் திடீரென வீட்டுக்குள் புகுந்து, திருட முயற்சி செய்ததாக தெரிகிறது.

இதைப் பாா்த்த காஞ்சனா, கதவை தாழிட்டுவிட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று லேகநாதனை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரித்தனா்.

ஏற்கெனவே 2 கொலை முயற்சி மற்றும் 3 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய லேகநாதன், போலீஸாா் விசாரணையின்போதே, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்து, மாா்பு பகுதியில் அறுத்துக்ெ காண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து, போலீஸாா் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com