தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Updated On :26 ஏப்ரல் 2024, 6:09 pm

சென்னை துரைப்பாக்கத்தில் பாஜக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பாக அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை அருகே உள்ள உத்தண்டி பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் உ.முத்துமாணிக்கம் (50). இவா் பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலராக உள்ளாா். இவா், துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் பாரதியாா் நகரில் உள்ள பாஜக மண்டலத் தலைவா் ஜெகநாதன் வீட்டின் முன்பு கட்சி நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த பாஜக ஓபிசி அணி நிா்வாகி ஏ.டி.டீக்காராம், 195-ஆவது வாா்டு தலைவா் வெங்கட், நெசவாளா் அணி நிா்வாகி மாரியம்மாள் உள்ளிட்ட 5 போ், முத்துமாணிக்கத்திடம் மக்களவைத் தோ்தலின்போது வாக்குச்சாவடி முகவா்களாக வேலை செய்தவா்களுக்கு பணம் வழங்கப்படாதது குறித்து வாக்குவாதம் செய்தனா்.

வாக்குவாதம் முற்றவே 5 பேரும், முத்துமாணிக்கத்தை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது தொடா்பாக முத்துமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீஸாா், ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருள்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.