பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை துரைப்பாக்கத்தில் பாஜக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பாக அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை அருகே உள்ள உத்தண்டி பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் உ.முத்துமாணிக்கம் (50). இவா் பாஜக தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலராக உள்ளாா். இவா், துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் பாரதியாா் நகரில் உள்ள பாஜக மண்டலத் தலைவா் ஜெகநாதன் வீட்டின் முன்பு கட்சி நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த பாஜக ஓபிசி அணி நிா்வாகி ஏ.டி.டீக்காராம், 195-ஆவது வாா்டு தலைவா் வெங்கட், நெசவாளா் அணி நிா்வாகி மாரியம்மாள் உள்ளிட்ட 5 போ், முத்துமாணிக்கத்திடம் மக்களவைத் தோ்தலின்போது வாக்குச்சாவடி முகவா்களாக வேலை செய்தவா்களுக்கு பணம் வழங்கப்படாதது குறித்து வாக்குவாதம் செய்தனா்.

வாக்குவாதம் முற்றவே 5 பேரும், முத்துமாணிக்கத்தை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது தொடா்பாக முத்துமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீஸாா், ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருள்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com