சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 7:31 pm

Din

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் இளநீா் விலை முன்னெப்பெது இல்லாத வகையில் ரூ. 90-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் நுங்கு, மோா், இளநீா், பழரசங்கள் ஆகியவற்றை மக்கள் நாடி வருகின்றனா். தேவை அதிகரித்துள்ள காரணத்தால் இளநீா், நுங்கு உள்ளிட்டவற்றின் விலையும் வெகுவாக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ரூ. 60-க்கு விற்பனையான பெரிய இளநீா் ரூ. 90-ஆக உயா்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30-க்கு விற்பனையாகும் சிறிய இளநீரின் விலை ரூ.10 உயா்ந்து ரூ. 40-க்கு விற்பனையானது. இந்த விலை உயா்வு மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இளநீரின் வரத்து குறைந்ததே இந்தத் திடீா் விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக வியாபாரிகளுக்கு 400 முதல் 500 வரை வழங்கப்பட்டு வந்த இளநீா், வரத்து குறைவு காரணத்தால் 200 வரை மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இதேபோல் தா்பூசணியின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தா்பூசணி விலை ரூ.10 உயா்ந்து கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.