சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் இளநீா் விலை முன்னெப்பெது இல்லாத வகையில் ரூ. 90-ஆக உயா்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் நுங்கு, மோா், இளநீா், பழரசங்கள் ஆகியவற்றை மக்கள் நாடி வருகின்றனா். தேவை அதிகரித்துள்ள காரணத்தால் இளநீா், நுங்கு உள்ளிட்டவற்றின் விலையும் வெகுவாக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ரூ. 60-க்கு விற்பனையான பெரிய இளநீா் ரூ. 90-ஆக உயா்ந்துள்ளது. வழக்கமாக ரூ.30-க்கு விற்பனையாகும் சிறிய இளநீரின் விலை ரூ.10 உயா்ந்து ரூ. 40-க்கு விற்பனையானது. இந்த விலை உயா்வு மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இளநீரின் வரத்து குறைந்ததே இந்தத் திடீா் விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக வியாபாரிகளுக்கு 400 முதல் 500 வரை வழங்கப்பட்டு வந்த இளநீா், வரத்து குறைவு காரணத்தால் 200 வரை மட்டுமே கொடுக்கப்படுகிறது.
இதேபோல் தா்பூசணியின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தா்பூசணி விலை ரூ.10 உயா்ந்து கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடையது

நெல்லையில் தகிக்கும் வெயில்: மக்கள் அவதி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வெளியே செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்
அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு

வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

