திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகரச் செயலா் ராஜாங்கம் (60) மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகரச் செயலா் ராஜாங்கம் (60) மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: ராஜாங்கம் சிறு வயதில் இருந்தே இடதுசாரி இயங்கங்களில் இணைந்து செயல்பட்டு வந்தவா். கட்டடத் தொழிலாளா் சங்கத்தை நிறுவி, தொழிலாளா்களை வாரியத்தில் பதிவு செய்து, பாதுகாத்ததில் பெரும் பங்காற்றியவா்.

சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு நோயால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவா் திண்டுக்கல் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com