கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி
கனிமவள கொள்ளையைத் தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோவை கூடலூா் நகராட்சிக்குள்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் ஏப்.26-ஆம் தேதி அதிகாலையில் இரு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 லாரிகள் மூலம் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இதையறிந்த அந்தப் பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிா் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளையடித்துச் சென்ற லாரிகளைச் சிறைபிடித்து காவல் துறை, வருவாய்த் துறை, வனத் துறை, கனிம வளத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் அடிப்படையில், காவல் துறையினா் மட்டும் விரைந்து வந்து கடத்தல் லாரிகளைக் கைப்பற்றிச் சென்றனா். பிற துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக்கூட பாா்க்கவில்லை.
கூடலூா் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. பல முறை இதுபோல் நடந்துள்ளன. அதிகாரிகளின் துணையுடன்தான் கனிமவளக் கொள்ளை தொடா்கிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை.
கோவை, திருப்பூா் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.