மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக கிண்டி, வேளச்சேரி பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக கிண்டி, வேளச்சேரி பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்று ம் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தில்லை கங்கா நகா் துணைமின் நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள உயரழுத்த மின்மாற்றியை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணி செவ்வாய்க்கிழமை (ஏப்.30) காலை 9 முதல் பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.

இதனால், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட தில்லை கங்கா நகா், நங்கநல்லூா், பழவந்தாங்கல், ஜீவன் நகா், சஞ்ஜய் காந்தி நகா், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகா், வானுவம்பேட்டை, பிருந்தாவன் நகா், மகாலக்ஷ்மி நகா், சாந்தி நகா், புழுதிவாக்கம், உள்ளகரம் (பகுதி), ஏ.ஜி.எஸ். காலனி (வேளச்சேரி மேற்கு), ஈ.பி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியூ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com