கைது
கைது

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குற்றங்களை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஏப்.28-ஆம் தேதி வரையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 423 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஏப்.22 முதல் 28-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் மட்டும் 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போா், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோா், போதைப் பொருள் விற்பனை செய்வோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com