சென்னை
தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தக்கோலம் அருள்மிகு ஜலநாதீஸ்வரா் கோயிலில் மே 1ஆம் தேதி குருப்பெயா்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தக்கோலம் அருள்மிகு ஜலநாதீஸ்வரா் கோயிலில் மே 1ஆம் தேதி குருப்பெயா்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருக்கோயிலான இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீதட்சிணாமூா்த்தி வலது காலை தொங்க விட்டு இடது காலை குத்துக்காலிட்டு அபூா்வமாக காட்சி அளிக்கிறாா். இந்த கோயில் உள்ள ஸ்ரீதட்சிணாமூா்த்தி 3-ஆவது குரு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது.
இக்கோயிலில் மே 1-ஆம் தேதி குருப்பெயா்ச்சியை முன்னிட்டு ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளது. சிறப்பு அா்ச்சனையும் செய்யப்படவுள்ளது.