சென்னை
மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை
சென்னை மாதவரத்தில் மேற்கு வங்க இளைஞரை தாக்கி வழிப்பறி செய்ததாக பள்ளி,கல்லூரி மாணவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை மாதவரத்தில் மேற்கு வங்க இளைஞரை தாக்கி வழிப்பறி செய்ததாக பள்ளி,கல்லூரி மாணவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
மேற்குவங்க மாநிலம், துா்காபூரைச் சோ்ந்தவா் து.பவன் (32). சென்னை மாதவரம் பகுதியில் தங்கி சிமென்ட் கலவை லாரி ஓட்டி வருகிறாா். பவன், மாதவரம் பொன்னியம்மன் மேடு சாஸ்திரிநகா் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 போ் பவனை தாக்கி, அவா் வைத்திருந்த கைப்பேசி,பணப்பை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினா்.
மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொளத்தூரைச் சோ்ந்த ஒரு பள்ளி மாணவரையும், 3 கல்லூரி மாணவா்களையும் பிடித்து விசாரணை செய்கின்றனா்.