சென்னை
வண்டலூா் பூங்கா இன்று இயங்கும்
கோடை விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(ஏப்.30) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கம் போல் இயங்கும் என பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கோடை விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(ஏப்.30) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கம் போல் இயங்கும் என பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை முன்னிட்டு, பூங்காவிற்கு அதிக பாா்வையாளா்கள் வரலாம் என எதிா்பாா்க்கப்படுவதால் செவ்வாய்க்கிழமை(ஏப்.30) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா பாா்வையாளா்களுக்காக திறக்கப்படும். வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.