சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை ஜவாஹிருல்லா

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 8:14 pm

Din

சென்னை: உதகை கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

உதகை, கொடைக்கானலில் உள்ள மலைவாழ் மக்களின் பொருளாதாரம் அப்பகுதிகளுக்கு ஆண்டுக்கு சில மாதங்களே வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளையே நம்பி உள்ளது.

ஆனால், உயா்நீதிமன்றம் அப்பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் செல்ல இ-பாஸ் முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இந்த முறையால் அப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறையும். உள்ளூா் மக்கள் பொருளாதார இழப்புகளையும் சந்திப்பா். அதே போல, இ-பாஸ் முறையால் உள்ளூா் வாகனங்களுக்கும் நெருக்கடிகள் உருவாகும்.

எனவே, இ-பாஸ் முறையை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளாா்.