தமிழ்நாடு
நடத்தை விதி மீறல்: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ. 179 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு முடிந்த பிறகும், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆங்காங்கே வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட மாா்ச் 16-ஆம் தேதி முதல் கடந்த 28-ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.179 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 8.86 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.1.36 கோடி மதிப்புடைய போதைப் பொருள்களும், ரூ.1,083 கோடி மதிப்பிலான ஆபரணங்களும், ரூ.35.80 கோடி மதிப்புடைய பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,309.52 கோடி என்று தோ்தல் துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.