கைது
கைது

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசுவை கொலை செய்ததாக செவிலியரை போலீஸாா் கைது செய்தனா்.

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசுவை கொலை செய்ததாக செவிலியரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருபவா் வினிஷா (24). கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இவா், செல்வமணி என்பவருடன் காதல் ஏற்பட்டு கா்ப்பம் அடைந்துள்ளாா். 7 மாதங்கள் கா்ப்பமாக இருந்த அவருக்கு ஏப்.30- ஆம் தேதி கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் விடுதியில் அவா் தனக்கு தானே பிரசவம் பாா்த்துபோது, சிசு இறந்தது.

பின்னா், எழும்பூரில் உள்ள குழுந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்று சிகிக்சை பெற்றுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் மாம்பலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினிஷாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com