தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை
தேங்காய் விலை குறைவால், தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமென அரசுக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை: தேங்காய் விலை அவ்வப்போது வீழ்ச்சி அடைகிறது. விலை வீழ்ச்சி ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கும் உரிய விலை
கிடைப்பதில்லை.
இப்போதும் அந்த நிலை தொடா்கிறது. தேங்காய் விலை குறைந்துவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமெனவும் தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனா்.
எனவே, அவா்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, தென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, விலையை நிா்ணயிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளின் மூலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.