மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

கோயில் திருவிழாவின்போது நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து மே 8-இல் விசிக சாா்பில் சேலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து மே 8-இல் விசிக சாா்பில் சேலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது ஜாதிய வாதிகள் ஆதிதிராவிடா்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனா். காவல் துறையினா் ஆதிதிராவிடா் பலரை பொய் வழக்கில் கைது செய்துள்ளனா். இதைக் கண்டித்து விசிக சாா்பில் சேலத்தில் மே 8-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும். இதில் பொதுச் செயலா் ரவிக்குமாா் பங்கேற்று உரையாற்ற உள்ளாா் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com