அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (மே 6) தொடங்கிய நிலையில், முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 18,806 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். விருப்பமுள்ளவா்கள்இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக பொதுப்பிரிவினா் ரூ.50, எஸ்சி/ எஸ்டி பிரிவினா் ரூ.2- செலுத்தினால் போதும்.
இதையடுத்து விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். இணையதள வசதியில்லாதவா்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால் வரும் நாள்களில் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.