ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

News image
Updated On :7 மே 2024, 9:36 pm

Din

சென்னை: சென்னை மாநகரின் மின் நுகா்வு இதற்கு முன் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் தினசரி மின் நுகா்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி சென்னை மாநகரின் அதிகபட்ச மின் தேவை புதிய உச்சமாக 4,590 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது.

அதேபோல சென்னையின் மின் நுகா்வும் 97.77 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படும் குளிா்சாதனங்கள் உள்ளிட்ட மின் உபகரணங்களே இந்த அதிக மின் நுகா்வுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.