சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் தானமாகப் பெறப்பட்டதில் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மணலி புது நகா் எழில் நகரை சோ்ந்த மகேஷ் (33) என்பவா், மின் ஆற்றல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். கடந்த 5-ஆம் தேதி பிற்பகலில் தனது நண்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். பின்னா் அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் கடந்த 7-ஆம் தேதி அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க குடும்பத்தினா் முன்வந்தனா். இதையடுத்து, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இதய வால்வு, தோல், இரண்டு கண்கள் என மொத்தம் 7 உறுப்புகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 5 நோயாளிகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளை சோ்ந்த 2 நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது. விபத்தில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி தலைமையில் அஞ்சலியும், மரியாதையும் தெரிவிக்கப்பட்டது.