தொடர் திருட்டு: வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மாதவரம் பகுதியில் தொடர் திருட்டுகளைத் தடுக்க வலியுறுத்தி ரெட்டேரி அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தொடர் திருட்டு: வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மாதவரம் பகுதியில் தொடர் திருட்டுகளைத் தடுக்க வலியுறுத்தி ரெட்டேரி அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ரெட்டேரி சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கொளத்தூர் ரவி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் எஸ்.எம்.பி. செல்லதுரை முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், கொளத்தூர், சாஸ்திரி நகர், லட்சுமிபுரம்,
விநாயகபுரம், சூரப்பட்டு பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு, தொடர் கொள்ளை நடைபெறுவதை தடுத்து நிறுத்தவும், கொள்ளையர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும், கொள்ளையர்களிடம் இருந்து களவுப் பொருள்களை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும். காவல்துறையினர் எப்போதும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்டன.
இந்நிலை தொடருமானால், மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாக, மாவட்டத் தலைவர் கொளத்தூர் ரவி தெரிவித்தார். மாநிலப் பொருளாளர் சதக்கத்துல்லா , சென்னை மண்டலத் தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com