திருத்தணியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர்.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட குமரன் நகரைச் சேர்ந்தவர் உமாபதி (60). இவர், ஓய்வு பெற்ற தலைமையா
சிரியர். இந்நிலையில் உமாபதி, புதன்
கிழமை வீட்டை பூட்டிவிட்டு, வங்கிச் சென்றார்.
பின்னர், திரும்பிய வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வர
வழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.