கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து உறிஞ்சியதாக 3 வீடுகளில் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து முறைகேட்டில் ஈடுபடுவோர் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 3 வீடுகளில் முறைகேடாக போடப்பட்டிருந்த மின்மோட்டார்களை புதன்கிழமை பறிமுதல் செய்ததோடு, அந்த வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவோர், மின்மோட்டார்களை அவர்களாகவே அகற்றிட வேண்டும் என பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.