கும்மிடிப்பூண்டி கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தொடர்ந்து 10-ஆவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 72 பேரும் தேர்ச்சியடைந்தனர். மாணவர் என்.எச்.சர்வேஷ் குமார் 489 மதிப்பெண்களும், மாணவிகள் கே.சௌமியா, டி.விஷ்ணுபிரியா ஆகியோர் 487 மதிப்பெண்களும், மாணவர் எம்.பாலமுருகன் 484 மதிப்பெண்களும் பெற்றனர்.
மாணவி சௌமியா கணிதத்திலும், எம்.பாலமுருகன் அறிவியலிலும், ஜெ.சந்தோஷ், கே.சதீஷ்குமார் ஆகியோர் சமூக அறிவியலிலும் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் திருஞானம், தலைமை ஆசிரியர் தேன்மொழி திருஞானம், நிர்வாகி ஞானதீபன் ஆகியோர் பாராட்டி இனிப்புகளை வழங்கினர்.