திருவள்ளூர் மாவட்ட லாயர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட லாயர்ஸ் அசோசியேஷன் சார்பில் 2019-ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இத்தேர்தலில் புதிய தலைவராக எஸ்.கே.ஆதாம், செயலராக கே.கார்த்திக், பொருளாளராக ஆர்.ஆர்.ரமேஷ், துணைத் தலைவராக டி.விஜய்பாபு, துணைச் செயலராக சி.சரவணன், நூலகராக ஆர்.வில்விஜயன், காப்பாளராக ஜி.கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.