திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: விவசாயிகள் குறை தீர் கூட்டம் பிப்ரவரி 16-இல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
இதில், குறைகள் தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்ய இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.