பட்டமளிப்பு விழா

ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியில் உள்ள மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியில் உள்ள மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். இதில், நிர்வாக குழு உறுப்பினர்கள் திருக்குமரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் பூமா சிறப்புரை வழங்கினார். இதில், துணை முதல்வர் ராமசாமி வரவேற்புரை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் குஞ்சிபாதம் வாழ்த்துரை வழங்கி, பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில்  சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அவர் கெளரவித்தார்.
இந்த விழாவில், 150-க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜி.வி.ஹரிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com