பிராணிகள் வதைத் தடுப்பு சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை

திருவள்ளுர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள்

திருவள்ளுர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கால்நடைப் பராமரிப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளுர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் சாதாரண உறுப்பினராகச் சேர ஆண்டு சந்தா ரூ.10- ம், ஆதரவு உறுப்பினராகச் சேர நன்கொடையாக ரூ.1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையும் வழங்க வேண்டும். அதோடு, விண்ணப்பதாரர் எந்த அரசியல் கட்சி சார்புடையவராகவும் இருக்கக் கூடாது. மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கான நபர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்தலில் சங்க உறுப்பினர்களே போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும். செயற்குழுவின் பணிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
இதற்கான விண்ணப்பங்களை, மண்டல இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, எண் 179, ஜே.என்.சாலை,
திருவள்ளூர்-602001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ வரும் 13 -க்குள் விண்ணப்பித்து  பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com