மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு நகரை சேர்ந்தவர் ரவி நாராயணன்(53). இவர் தனது குடும்பத்தினருடன் இரு தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையர் கலைச்செல்வன் மற்றும் போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.