திருத்தணி அருகே தாயும் மகனும் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
திருத்தணி அருகே பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் பெருமாள் (45), அரக்கோணத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையின் தலைமை செக்யூரிட்டி.
ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் வேலைக்குச் சென்றபோது வீட்டில் இவரது மனைவி வீரலட்சுமி (40) மகன் போத்திராஜ் (10)(படம்), இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். திங்கள்கிழமை காலை வேலை முடிந்து பெருமாள் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது மனைவி வீரலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டும், தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டும் மகன் போத்திராஜ் கழுத்து இறுக்கிக் கொலை செய்யப்பட்டும் கிடந்தனர். திருத்தணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். திருவள்ளூர் எஸ்.பி. பொன்னி மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்தனர். மோப்ப நாய் ராம்போ கொண்டு வரப்பட்டது.
முதல் கட்ட விசாரனையில் பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகையைக் காணவில்லை என்பது தெரியவந்தது. நகைக்காக கொலை செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தார்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அûமைக்கப்பட்டுள்ளன.