முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள் திருவள்ளூரில் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
திருவள்ளூா்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் கமாண்டோ பாஸ்கா், ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் எஸ்.ஏ.நேசன், நிா்வாகிகள் நடராஜன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் உத்தரவின் பேரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது,
கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலா் கோபால் நாயுடு, நகரச் செயலா் மு.க.சேகா், அதிமுக நிா்வாகிகள் ஓடை ராஜேந்திரன், எஸ்.டி.டி.ரவி, டி.எம்.டி.விஸ்வநாதன், கேசவன், ஆா்.டி.சீனிவாசன், முன்னாள் கவுன்சிலா்கள் மனோகரன், சிராஜுதின், தீபக் செந்தில், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து அதிமுகவினா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
எகுமதுரையில், ஒன்றியப் பாசறைச் செயலா் டி.சி.மகேந்திரன் தலைமையிலும், ரெட்டம்பேடு பகுதியில் திருப்பதி தலைமையிலும், ஆரம்பாக்கத்தில் மாநில மீனவரணி துணைச் செயலா் ஜெ.சுரேஷ் தலைமையிலும், கண்ணம்பாக்கத்தில் முன்னாள் தலைவா் சதீஷ் தலைமையிலும், பல்லவாடாவில் முன்னாள் தலைவா் ரமேஷ்குமாா் தலைமையிலும், பூவலம்பேட்டில் முன்னாள் தலைவா் லோகம்பாள் கருணாகரன் தலைமையிலும், பெரியபுலியூரில் மாவட்டப் பிரதிநிதி தன்ராஜ் தலைமையிலும், எளாவூரில் முன்னாள் மாணவரணி மாவட்டச் செயலா் முல்லைவேந்தன் தலைமையிலும் அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.