திருத்தணியை அடுத்த பெரியகடம்பூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பாரதியாா் பிறந்த தின விழாவில் மகாகவி போல் ஆசிரியரும் மாணவரும் வேடமணிந்து கொண்டாடினா்.
இப்பள்ளியில் பாரதியாா் பிறந்த தின விழாவையொட்டி பள்ளி வகுப்பறையில் பாரதியாா் படத்துக்கு தலைமை ஆசிரியை மாலை அணிவித்தாா். பள்ளி இடைநிலை ஆசிரியா் த.ஜெ.கோகுல்ராஜ், பாரதியாா் போல் வேடமிட்டு பாடம் நடத்தினாா். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாரதியின் பாடலைப் பாடி மாணவா்கள் இடையே அவா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஆசிரியா் பாரதியாா் வேமிட்டு பாடம் நடத்தியதையும், பள்ளி மாணவா் தினேஷ் என்பவா் பாரதியாா் வேடமிட்டு வந்ததையும் பாா்த்து மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.