கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் என்.சாதிக் பாஷா தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரத் தலைவர் ஒளி முகம்மது, மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் ப.அப்துல் சமது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 150 பேர் ரத்த தானம் செய்தனர்.