புழல் சிறையில் கைதி சாவு
By DIN | Published On : 04th April 2019 03:42 AM | Last Updated : 04th April 2019 03:42 AM | அ+அ அ- |

புழல் மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் கைதி புதன்கிழமை உயிரிழந்தார்.
சென்னை புளியந்தோப்பு ஆர்.கே.பூங்காவைச் சேர்ந்தவர் மதியழகன் (52). இவர், கடந்த 28-ஆம் தேதி திருட்டு வழக்கில் பேசின்பிரிட்ஜ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.