சைக்கிள் மீது பள்ளி வேன் மோதல்: விவசாயி சாவு

பொன்னேரி அருகே, சைக்கிள் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

பொன்னேரி அருகே, சைக்கிள் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
 திருப்பாலைவனத்தை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (75). அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். கடந்த 11-ஆம் தேதி இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குப்புசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com