வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்குப் பதிவை வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 


திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்குப் பதிவை வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 
இத்தேர்தலுக்காக மொத்தம் 3,603 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கும்மிடிப்பூண்டி, திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிகவும் பதற்றம் நிறைந்த 9 வாக்குச் சாவடி மையங்களும், மிதமான பதற்றம் நிறைந்த 166 வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வாக்குப் பதிவு நாளில் இந்த வாக்குச்சாவடிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்பாடு அறை அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com