திருவள்ளூர் அருகே டிராக்டர் மோதியதில் 7 மாத குழந்தை உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (27). திருவள்ளூர் அருகே வெள்ளவேடு பகுதியில் உள்ள செங்கல்சூளையில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தனது 7 மாத குழந்தை வசந்தகுமாரை செங்கல்சூளை அருகே நிழலில் தூங்க வைத்துவிட்டு, தனது மனைவியுடன் காமராஜ் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் குழந்தை வசந்தகுமார் உயிரிழந்தான். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் காமராஜ் அளித்த புகாரின்
பேரில், டிராக்டர் ஓட்டுநர் மணிமாறன் மீது வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.