முன்னாள் படைவீரர்களுக்கு நாளை சுய தொழில் கருத்தரங்கு

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் சுய தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு  

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் சுய தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு  கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. 
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் வேலைவாய்ப்புக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை (ஆக.16-ஆம் தேதி) நடைபெறவுள்ளது. 
இக்கருத்தரங்கம் ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. சுயதொழில் வேலைவாய்ப்புகளுக்கான ஆலோசனை வழங்கப்பட உள்ளதால் இந்த கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com