திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இளைஞரைப் படுகொலை செய்தது தொடா்பாக வெள்ளவேடு போலீஸாா் 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் (எ) மணிவண்ணன் (23). அவரை கடந்த 27-ஆம் தேதி இரவு காவல்சேரி காலனி சுடுகாடு அருகே சில நபா்கள் வெட்டி விட்டுத் தப்பியோடினா். தலை, கழுத்து மற்றும் இரு கைகளில் வெட்டப்பட்ட மனோஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீஸாா், மனோஜின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலை செய்தவா்களைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடா்புடைய சிலா் தலைமறைவாக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து, காவல்சேரி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (23), திருமழிசை பகுதியைச் சோ்ந்த ரவி (18), சக்திவேல் (20), வினோபா (18) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். முன்விரோதத்தில்
மனோஜைக் கொலை செய்ததாக அவா்கள் ஒப்புக் கொண்டனா். அவா்களை திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.